பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து
வைப்பு
[2017/01/18]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன
அவர்கள் களனி பொல்லேகள்ளயிலுள்ள மானல் வத்த மஹா விகாரையில் தர்மச்சக்கர
பிரவர்த்தன திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (ஜனவரி
.18) கலந்துகொண்டார்.
இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை
[2017/01/18]
(2016)
டிசம்பர் 31ம் திகதி நிறைவுபெற்ற பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள்
சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்ளத் தவரியவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ
பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பிரித் வைபவ நிகழ்வு
[2017/01/18]
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பத்தாண்டுகள் நிறைவினை
முன்னிட்டு இடம்பெற்ற்ற முழு இரவு பிரித் வைபவ நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு
சேவைகள் கல்லூரியில் அண்மையில் (ஜனவரி . 16) இடம்பெற்றது.
திங்கட்கிழமை கோட்டே ரயில் நிலையத்தின் முன் லான்ஸ் கோப்ரல் எச். ஏ
ஹீன்பண்டாவின் ஆர்பாட்டம்
[2017/01/17]
இராணுவ
நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அங்கவீனமுற்ற லான்ஸ் கோப்ரல்
எச். ஏ ஹீன்பண்டா, யக்கல இராணுவ ஆடைத் தொழிற்சாலையில் இலகு வேலைகளுக்கு
அமர்த்தப்பட்டார். அவருக்கு இவ்வாடைத் தொழிற்சாலையின் சஹன சேமலாப கடன்
திட்டத்தின் கணக்கினை கையாளும் எழுதுவினைஞர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஊரணி மீன்பிடி துறைமுகம் மீண்டும் மீனவர்களிடம்
[2017/01/16]
ஊரணி மீன்பிடி துறைமுகத்தை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம்
கையளிக்கும் நிகழ்வு அண்மையில் (ஜனவரி.14) யாழ் பாதுகாப்பு படை தலைமையக
படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
கடற்படையினரால் 100வது நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது
[2017/01/15]
யாழ் பொலிஸ் நிலையம் மற்றும் பதவிய உறேவ கிராமம்
என்பவற்றில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட 99வது மற்றும் 100வது
நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று (ஜனவரி. 14) மக்கள் பாவனைக்காக திறந்து
வைக்கப்பட்டன.
தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி
[2017/01/14]
மானிட
வளர்ச்சியின் ஆரம்பம் முதலே இயற்கையுடன் நெருங்கிய பினைப்பினைக்
கொண்டிருந்த மனிதன், ஒட்டுமொத்த இயற்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
சூரிய பகவான் மீது கொண்ட அபரிமித பக்தியை, பரிணாம வளர்ச்சியை நோக்கிய
பயணத்தின்போதும் கைவிடவில்லை.
வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம்
பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.
[2017/01/13]
வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம்
வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின்
ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக
ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க விரிவுரை
[2017/01/13]
பாதுகாப்பு அமைச்சினால் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும்
நல்லிணக்க வாரத்தினை முன்னிட்டு ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம்
தொடர்பான விரிவுரை ஒன்று அமைச்சில் இன்று (ஜனவரி.13) இடம்பெற்றது.
ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் வெளிநாட்டு கொள்கையின்
வெற்றியாக மீண்டும் இலங்கைக்கு GSP+ சலுகை...
[2017/01/12]
இலங்கை
ஏற்கனவே இழந்திருந்த GSP+ சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு
ஐரோப்பிய வர்த்தக ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு மேலும் பல உதவிகள்
[2017/01/12]
அண்மையில் (ஜனவரி.10) இலங்கை இலகு காலாட்படையை சேர்ந்த
14 (தொண்டர்) இராணுவத்தினரால் சம்பத்நுவர பிரதேசத்திலுள்ள “ரணவிரு பியச”
எனும் கிராமத்தில் பாவனையிலில்லாத கட்டிடமொன்றை புதுப்பித்து முன்பள்ளி
ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தினரால் பல்வேறு சமூகசேவை திட்டங்கள் முன்னெடுப்பு.
[2017/01/11]
இலங்கை இராணுவ சமூகசேவை திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவ
விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பணியகம் விவசாயிகளின் விவசாய மற்றும் பண்ணை
அறிவை மேம்படுத்தும் வகையிலான பயிற்சி நிகழ்வொன்றினை அண்மையில் (ஜனவரி. 08)
ஆரம்பித்த்து வைத்தனர்.