பாதுகாப்பு அமைச்சினால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு
[2017/02/01]
கொழும்பு
பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளில் விஷேட டெங்கு ஒழிப்புத்திட்டம் ஒன்றினை
இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சு இன்று ( ஜனவரி
.01) மேற்கொண்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டெங்கு
நோய் பரவுவதை தடை செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணிக்கு ஜனாதிபதி அதிகாரக் கோல் வழங்கி
வைப்பு
[2017/01/31]
இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படையணியினருக்கு
ஜனாதிபதி அதிகாரக்கோல் மற்றும் படையணி அதிகாரக்கோல் என்பனவற்றை வழங்கி
வைக்கும் விஷேட வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட்
படைத்தலைமையகத்தில் நேற்று (ஜனவரி.30) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின்
தலைமையில் இடம்பெற்றது.
வண. தம்மாராம தேரரருக்கு பட்டம் வழங்கிவைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2017/01/30]
களுத்துறை பலதோட்ட ஸ்ரீ கங்காராம விகாரையில் நேற்று (ஜனவரி.
29) இடம்பெற்ற களுத்துறை மாவட்டத்திற்கான பிரதி பிரதம சங்கநாயக்க தேரராக
வணக்கத்துக்குரிய துவகொட தம்மாராம தேரரருக்கு பட்டம் வழங்கிவைக்கும் விஷேட
நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.
இராணுத்தினரால் யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்
[2017/01/29]
அண்மையில் யாழ் குடா நாட்டில் இலங்கை இராணுவத்தினரால்
டெங்கு ஒழிப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
விழிப்புலனற்றோர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு
இலங்கை இராணுவ வீரர்கள் தெரிவு
[2017/01/29]
இந்தியாவில் நடைபெறும் விழிப்புலனற்றோர் இருபதுக்கு
இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணியை பிரதிநிதிப்படுத்தி
இலங்கை இராணுவத்தின் விழிப்புலனற்ற நான்கு கிரிக்கெட் வீரர்கள்
விழிப்புலனற்றோர்களுக்கான தேசிய கிரிக்கெட் சபையினால் தெரிவு
செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவலகள் தெரிவிக்கின்றன.
தாமரைத் தடாகத்தில் இராணுவ வீர வீராங்கனைகளின் வர்ணக்காட்சிகள்
[2017/01/28]
இலங்கை
இராணுவம் அண்மையில் ( ஜனவரி .27) தாமரைத்தடாகத்தில் இராணுவ வீர
வீராங்கனைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு
செய்திருந்த “கலர் நைய்ட் – 2016” நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ.
இலங்கை இராணுவ கல்லூரியின் மொழியியல் கற்கைப் பிரிவினால் பிரெஞ்சு மொழி
கற்கைகள்
[2017/01/28]
இலங்கை இராணுவ கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை விரிவு
படுத்தும் நோக்கில் “ஸ்மார்ட் கிளாஸ்” எனும் மொழியியல் கற்கைப் பிரிவு
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின்
வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாகதீப விகாரையில் புத்தர் சிலை செயலாளரினால் திரைநீக்கம்
[2017/01/27]
நாகதீப புராண ரஜமகா விகாரையில் கல்லில் செதுக்கப்பட்ட
புத்தர் சிலை ஒன்றினை பாதுக்கப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன
ஹெட்டியாராச்சி அவர்கள் அண்மையில் (ஜனவரி .26) திரைநீக்கம் செய்துவைத்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தலையீட்டையடுத்து உண்ணாவிரதப்
போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
[2017/01/27]
வவுனியாவில், காணாமல் போனோர்களின் உறவுகளால்
மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலையீட்டையடுத்து முடிவுக்கு
கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய
நேற்று (ஜனவரி.26) வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது
[2017/01/26]
கடந்த
காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி
சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை ஒரு இராணுவ அதிகாரி
மற்றும் 250 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த சக படைவீரரின் குடும்பத்திற்கான புதிய வீடு இராணுவத்தினரால்
நிர்மாணிப்பு
[2017/01/26]
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தில் 62வது பிரிவில்
சேவையாற்றும் 17வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த படை வீரர்கள்,
ஆர்ய பவுண்டேஷன் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் இணைந்து உயிரிழந்த
சக படைவீரரின் குடும்பத்திற்காக நிர்மாணித்த புதிய வீட்டினை கையளிக்கும்
நிகழ்வு நேற்று (ஜனவரி.25) இடம்பெற்றது.