இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின வைபவம்
[2017/02/04]
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம்
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களின்
தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்றுக் காலை (2017 பெப்ரவரி 4ஆம்
திகதி சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது
[2017/02/03]
கடந்த
காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி
சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை(பெப்ரவரி, 02) 450
முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர்
ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வைபவத்திற்கான அனைத்து
நடவடிக்கைகளும் பூர்த்தி
[2017/02/03]
நாளைய
தினம் (பெப்ரவரி, 04) கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களின் தலைமையில் கொண்டாடப்படவுள்ள 69வது சுதந்திர தின
வைபவத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன. இவ்வருட
சுதந்திர தின நிகழ்வு “தேசிய ஐக்கியம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/02/03]
‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ எனும் இந்தோனேசிய
கடற்படைக்கப்பல் நேற்று (பெப்ரவரி, 02 ) கொழும்பு துறைமுகத்திற்கு
வருகைதந்தது. வருகை தந்த குறித்த இக்கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கு
அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வார்ட்டுத் தொகுதி
ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
[2017/02/03]
தொற்று நோய் மருத்துவமனையில் டெங்கு நோயாளர்களுக்கு என
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வார்ட்டு தொகுதி ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வைபவ ரீதியாக நேற்று (பெப்ரவரி, 02) திறந்து
வைக்கப்பட்டது.
அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே
அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி
[2017/02/02]
அனைத்து
மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது
அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்
தெரிவித்தார்.
சீன கடற்படையின் சமுத்திரவரைபட ஆய்வுக்
கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/02/02]
சீன
மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் சமுத்திரவரைபட ஆய்வுக் கப்பலான “குவான்
சன்கியாங்” நேற்று (பெப்ரவரி.01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை
தந்த குறித்த இக்கப்பல் சில முக்கிய தொழிநுட்ப காரணங்களுக்காக இங்கு சிறிது
தரித்திருக்கவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு பிராந்திய பாடசாலைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட டெங்கு
ஒழிப்பு திட்டம்
[2017/02/02]
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விஷேட டெங்கு ஒழிப்பு
செயற்றிட்டம் முப்பட்டயினரின் பூரண ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்பட்டது.
சுதந்திர தின ஏற்பாடுகளை பாதுகாப்பு செயாலாளர் கண்காணிப்பு
[2017/02/02]
காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 69வது சுதந்திர தின
ஏற்பாடுகள் மற்றும் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை என்பனவற்றை பாதுகாப்பு
செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று
(பெப்ரவரி.01) பார்வையிட்டார்.
பாதுகாப்பு அமைச்சினால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு
[2017/02/01]
கொழும்பு
பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளில் விஷேட டெங்கு ஒழிப்புத்திட்டம் ஒன்றினை
இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சு இன்று ( ஜனவரி
.01) மேற்கொண்டுள்ளனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டெங்கு
நோய் பரவுவதை தடை செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்நிகழ்வு
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.