ஜனாதிபதியினால் “சுவத உயன“ பூங்கா திறந்துவைப்பு.
[2017/02/07]
அண்மையில் (பெப்ரவரி .06) எல்தேனிய மஹர பிரதேசத்தில்
“சுவத உயன“ பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கோலாகலமாக
திறந்துவைக்கப்பட்டது. குறித்த இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர்
பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் சமுகமளித்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் விஷேட கலந்துரையாடல்
[2017/02/07]
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் மற்றும்
பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றினால் கொழும்பு
கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று
(பெப்ரவரி .06) கலந்துகொண்டார்.
கடலோர பாதுகாப்பு படையினரினால் மூன்று உயிர்கள் பாதுகாப்பாக மீட்பு
[2017/02/07]
அண்மையில் (பெப்ரவரி .04) இருவேறு நிகழ்வுகளின்போது
கடலில் மூழ்கி தத்தளித்த தெற்கு கரையோர பிரதேச கடற்கரையோரத்தில்
வெளிநாட்டவர் ஒருவர் உட்பட பல நபர்களின் உயிர்களை கடற்கரையோரத்தில்
உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின்
உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
திறந்துவைப்பு
[2017/02/06]
இலங்கை கடற்படையினரால் தெல்நேகமயின் தம்புத்தேகம மற்றும்
மொரகொல்லாகம ரஜமஹா விகாரை ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட மேலும் இரண்டு குடி
நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று (பெப்ரவரி .05)
திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு
[2017/02/06]
விளையாட்டு
மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் இன்று
(பெப்ரவரி .06) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கை கடற்படை கப்பல் சமுதுரா பாகிஸ்தான் “அமான்” கடற்படை பயிற்சியில்
[2017/02/05]
பாகிஸ்தான் “அமான்” கடற்படை பயிற்சியில்
கலந்துகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் நோக்கி
அண்மையில் (பெப்ரவரி .03) இலங்கை கடற்படையின் கடல் ரோந்துக் கப்பல் சமுதுரா
புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அவர்களின் சுதந்திர தினச் செய்தி
[2017/02/04]
எமது
சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமாயின் வறுமையிலிருந்தும்
நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமன்றி இன, மத, சாதி பேதம் போன்ற
வரையறைகளுக்குள் சிறைப்பட்டு, மோசமான ஆத்மீக மற்றும் பண்பாட்டு
வறுமைக்குட்பட்டுள்ள மக்களையும், சமூகத்தையும் அவற்றிலிருந்து விடுவித்து
மனித உரிமைகள் மற்றும் நீதிநெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க வேண்டுமென
ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின வைபவம்
[2017/02/04]
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம்
முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களின்
தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்றுக் காலை (2017 பெப்ரவரி 4ஆம்
திகதி சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது
முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது
[2017/02/03]
கடந்த
காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி
சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை(பெப்ரவரி, 02) 450
முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர்
ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.