இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கு ஓய்வூதியம்

[2017/02/14]

அங்கவீனமுற்று உரிய காலத்திற்கு முன்னரே ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கான சேவை ஓய்வூதிய கொடுப்பணவுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (பெப்ரவரி .14) இடம்பெற்றது.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான சந்திப்பு

[2017/02/15]

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர்களின் சங்க தூதுக்குழுவினர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களுடன் இன்று (பெப்ரவரி. 15) சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

 

பாகிஸ்தானில் இடம்பெறும் ‘அமான் 2017’ நிகழ்வில் இலங்கை கடற்படை பங்கேற்பு

[2017/02/14]

இலங்கை உட்பட 37 நாடுகள் பங்குபற்றும் சர்வதேச கடற்படை பயிற்சி ‘அமான் 2017’ பாகிஸ்தானில் இடம்பெற்றுவருகின்றது. பாகிஸ்தான் கடற்படையினால் இக்கடல்சார் ஒத்திகை பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இராணுவத்தினரினால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்

[2017/02/14]

நாட்டின் பல பாகங்களில் அண்மையில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

 

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

[2017/02/14]

அனுமதியற்ற நீண்டகால விடுமுறையிலுள்ள முப்படைகளைச் சேர்ந்த வீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகளில் இராணுவ பொலிசாருடன் இணைந்து இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்

 

அமெரிக்க தூதரக அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்

[2017/02/13]

கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் பிரியன் பேஜ் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நிபுணர் திரு ஜோன் ஹில்ஸ் ஆகியோர் அண்மையில் (பெப்ரவரி .08) முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

 

கடற்படையினரால் காரை தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம்

[2017/02/12]

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக வடபிராந்திய கடற்படை தலைமையகத்தினால் நடமாடும் மருத்துவ முகாமொன்று காரை தீவுப்பகுதியில் அண்மையில் (பெப்ரவரி,10) முன்னெடுக்கப்பட்டது.

 

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 563 பேர் கைது

[2017/02/11]

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் செயற்கை கால்கள் வழங்கி வைப்பு.

[2017/02/09]

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் குண்டசாலை மாற்று வலுவுள்ளோருக்கான நிலையத்தின் அனுசரணையுடன் அங்கவீனமுற்ற குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கும் மற்றுமொரு நிகழ்வு அண்மையில் (பெப்ரவரி. 07) கிளிநொச்சி ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

டில்மா தேயிலை கம்பனியால் நடத்தப்படும் கட்டுபெத்த நகர்சார் வன பூங்கா ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

[2017/02/08]

டில்மா தேயிலை கம்பனியால் கட்டுபெத்த பிரதேசத்தில் நடத்தப்படும் நகர்சார் வன பூங்கா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இன்று (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

 

 

ஜனாதிபதியினால் “சுவத உயன“ பூங்கா திறந்துவைப்பு.

[2017/02/07]

அண்மையில் (பெப்ரவரி .06) எல்தேனிய மஹர பிரதேசத்தில் “சுவத உயன“ பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் சமுகமளித்திருந்தார்.

 

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் விஷேட கலந்துரையாடல்

[2017/02/07]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றினால் கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று (பெப்ரவரி .06) கலந்துகொண்டார்.

 

கடலோர பாதுகாப்பு படையினரினால் மூன்று உயிர்கள் பாதுகாப்பாக மீட்பு

[2017/02/07]

அண்மையில் (பெப்ரவரி .04) இருவேறு நிகழ்வுகளின்போது கடலில் மூழ்கி தத்தளித்த தெற்கு கரையோர பிரதேச கடற்கரையோரத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட பல நபர்களின் உயிர்களை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

 

மேலும் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்துவைப்பு

[2017/02/06]

இலங்கை கடற்படையினரால் தெல்நேகமயின் தம்புத்தேகம மற்றும் மொரகொல்லாகம ரஜமஹா விகாரை ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட மேலும் இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று (பெப்ரவரி .05) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு

[2017/02/06]

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் இன்று (பெப்ரவரி .06) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

 

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரா பாகிஸ்தான் “அமான்” கடற்படை பயிற்சியில்

[2017/02/05]

பாகிஸ்தான் “அமான்” கடற்படை பயிற்சியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் நோக்கி அண்மையில் (பெப்ரவரி .03) இலங்கை கடற்படையின் கடல் ரோந்துக் கப்பல் சமுதுரா புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜனாதிபதி அவர்களின் சுதந்திர தினச் செய்தி

[2017/02/04]

எமது சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமாயின் வறுமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமன்றி இன, மத, சாதி பேதம் போன்ற வரையறைகளுக்குள் சிறைப்பட்டு, மோசமான ஆத்மீக மற்றும் பண்பாட்டு வறுமைக்குட்பட்டுள்ள மக்களையும், சமூகத்தையும் அவற்றிலிருந்து விடுவித்து மனித உரிமைகள் மற்றும் நீதிநெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின வைபவம்

[2017/02/04]

இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்றுக் காலை (2017 பெப்ரவரி 4ஆம் திகதி சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது

 

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது [2017/02/03]

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை(பெப்ரவரி, 02) 450 முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர தின வைபவத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி [2017/02/03]

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை [2017/02/03]

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வார்ட்டுத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்ப [2017/02/03]

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி [2017/02/02]

சீன கடற்படையின் சமுத்திரவரைபட ஆய்வுக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை [2017/02/02]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்