வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை மருத்துவக்குழு உதவி
[2017/06/23]
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணாமாக
பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி இலங்கை விமானபடையின்
மருத்துவகுழு இரு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ததது.
தாய்லாந்தில் இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் சாதனை
[2017/06/23]
இலங்கை இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் பெங்கொக்
நகரில் இடம்பெற்ற “2017ஆம் ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் டிராக் மற்றும்
பீல்ட் சாம்பியன்ஷிப்” போட்டியில் கலந்துகொண்டு பல நாடுகளை தோற்கடித்து
400மீட்டார் போட்டியில் தங்கப்பதக்கம் உட்பட மேலும் பல பதக்கங்களை வெற்றி
கொண்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டம் கண்ணிவெடியற்ற மாவட்டமாக பிரகடனம்
[2017/06/22]
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு அபாய சமிஞ்சை
விடுக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தை கண்ணிவெடியற்ற மாவட்டமாக
கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் பிரகடனப் படுத்தப்படும் நிகழ்வு நேற்று
(ஜுன்,21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கடற்படையினரால் யாழ் வைத்திய சாலைக்கு 100 கற்றாக்ட் லென்ஸ்கள்
அன்பளிப்பு
[2017/06/22]
இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு அமைவாக யாழ் போதனா
வைத்தியசாலைக்கு கற்றாக்ட் லென்ஸ்கள் எனப்படும் பார்வை வில்லைகள் நூறினை
(100) இலங்கை கடற்படையினர் அண்மையில் (ஜுன்,19 ) நடைபெற்ற நிகழ்வொன்றின்
போது அன்பளிப்பு செய்தனர.
உயிரிழந்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற
படைவீரர்கள் ஆகியோருக்கு வட்டியில்லா கடனுதவி
[2017/06/21]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன
மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி
ஆகியோரின் தலைமையில் போரின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பங்கள்
மற்றும் அங்கவீனமுற்ற படைவீரகளுக்கு வட்டியில்லா வீடமைப்பு கடனுதவியளிக்கும்
நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன்,21) இடம்பெற்றது.
யாழ் பகுதியில் இலங்கை கடற்படையினரின் மருத்துவ முகாம்
[2017/06/21]
இலங்கை கடற்படையினரால் அண்மையில் (ஜூன், 18) யாழ்பானம்
அனலைதீவுப்பகுதியில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த
இம்மருத்துவ முகாமில் இப்பகுதியில் புதிதாக குடியமர்த்தப்பட்ட சுமார் 230
குடும்பங்களை சேர்ந்த அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது
மருத்துவ தேவைகளுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரான்ஸ் கடற்படை கப்பலுக்கு விஜயம்
[2017/06/20]
நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கடற்படை
கப்பலை பார்வையிடவென இன்று (ஜூன்,20) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ
ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2017/06/20]
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகனுமா
அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொரவ ருவன் விஜேவர்தன அவர்களை
அமைச்சில் இன்று (ஜூன், 20) சந்திதித்துள்ளார்.
பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2017/06/20]
150வது பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி
ரியல் எட்மிரல் ஒலிவியர் லெபாஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ
ருவன் விஜேவர்தன அவர்களை அமைச்சில் இன்று (ஜூன், 20) சந்தித்துள்ளார்.
அமெரிக்க கடற்படைக் கப்பல் “லேக் எரை” நாடு திரும்பியது
[2017/06/20]
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில்
பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண பணிகளினை மேற்கொள்ளும் வகையில் இம்மாதம் 11
ம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் “லேக் எரை”
நேற்று (ஜுன் 19) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது
குறித்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வழியனுப்பி
வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவம் குப்பைகளை அகற்றுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில்
[2017/06/19]
அனுமதியற்ற மற்றும் முறையற்ற விதத்தில் குப்பைகளை
அகற்றுவதை கண்காணித்து அது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல் மற்றும்
முறையான விதத்தில் குப்பைகளை சேகரிப்பதனை அவதானித்தல் போன்ற நடவடிக்கைகளில்
தற்போது இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர்
ரோஷன் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பங்கேற்பு
[2017/06/18]
தியத்தலவாயிலுள்ள இலங்கை இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற
83வது நிரந்தர ஆட்சேர்ப்பு மற்றும் 57வது தொண்டர் ஆட்சேர்ப்பு சேர்ந்த கேடட்
அதிகாரிகள் தங்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் அணிவகுப்பு
நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள்
பிரதம அதிதியாக இன்று (ஜூன், 17) கலந்து சிறப்பித்தார்.
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான
நிலையத்தின் கலந்துரையாடல்
[2017/06/16]
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் 'இலங்கையில்
இயற்கை அனத்த அச்சுறுத்தலைக் தணித்தல் மற்றும் நிர்வகித்தல்' எனும்
தொனிப்பொருளில் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன
ஹெட்டியாராச்சி அவர்கள் தலைமையில் இன்று (ஜூன், 16) இடம்பெற்றது.
ஜனசக்தி – தேசிய விருது வழங்கும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் பங்கேற்பு
[2017/06/16]
நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாகத்தில் இடம்பெற்ற
2017ம் ஆண்டிற்கான ஜனசக்தி – தேசிய விருது வழங்கும் வைபவத்தில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்...
ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2017/06/15]
ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி
எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்
விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 15) சந்திதித்துள்ளார்...
‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார நிகழ்வு
[2017/06/15]
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும்
வகையில் அமைந்த ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் கலாச்சார நிகழ்வு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுன்,14) ...