சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்களின் சங்க மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2017/10/04]
பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்
நடைபெற்ற சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
சங்கத்தின் 08 ஆவது மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இன்று (ஒக்டோபர் 04) கலந்து
கொண்டார்.
இராணுவத்தினரால் யாழ் மக்களுக்கு நிவாரணம்
[2017/10/02]
யாழ் குடா பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் தட்டுப்பாட்டினை
நிவர்த்திக்கும் வகையில் குடிநீர் விநியோக நிவாரணத்திட்டம் ஒன்று இலங்கை
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள்
வெற்றிவாகை சூடினர்
[2017/10/02]
அண்மையில் (ஒக்டோபர், 01)
கண்டியில் இடம்பெற்ற குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் இலங்கை இராணுவத்தின்
சார்பில் கலந்து கொண்ட குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் மூன்று வெற்றி
கிண்ணங்களை தமதாக்கிக்கொண்டனர்.
அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கை வருகை
[2017/10/02]
அமெரிக்க கடற்படையின் லுவிஸ்
மற்றும் கிளார்க் கப்பல் 2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான
ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக திங்களன்று
(ஒக்டோபர், 02) திருகோணமலைக்கு வந்தடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய
செயலாளர் பதவியேற்பு
[2017/10/02]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர்
திரு சுனில் சமரவீர அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட
வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 02) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு
மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்
[2017/10/02]
இலங்கை கடற்படை மற்றும்
அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான
23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி
நடவடிக்கைகள் இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தின நிகழ்வில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2017/10/02]
இன்று (ஒக்டோபர், 01) பியகம சியம்பெலாபேவத்த கனிஷ்ட வித்தியாலயத்தில்
இடம்பெற்ற சிறுவர் தினகொண்டாட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கௌரவ.
கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி
படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
[2017/10/01]
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் சனியன்று
(செப்டம்பர், 30) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன. இலங்கை கடல்
எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட
குற்றத்திற்காக இப்படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கிளிநொச்சியில் பாரிய மரநடுகை
செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு
[2017/10/01]
இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டமான 135,000 மரக்
கன்றுகளை நடும் செயற்த்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
யாழ்பாணத்தில் இராணுவத்தினரால் வீடு
நிர்மாணிப்பு
[2017/09/30]
யாழ்ப்பாண பெரியவிளான் பிரதேசத்தில் வரிய குடும்பத்தினருக்கு இலங்கை
இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்று அன்பளிப்பு
செய்யப்பட்டுள்ளது.
68ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக மத
அனுஷ்டானங்கள் ஆரம்பம்
[2017/09/29]
இலங்கை இராணுவம் அதன் 68ஆவது இராணுவ தினத்தை எதிர்வரும் மாதம் (ஒக்டோபர்)
10 ஆம் திகதி கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு தொடர்ச்சியான சர்வ மத
வழிபாட்டு நிகழ்வுகள் பல இடம்பெற உள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மருத்துவ கட்டிடம் பொதுமக்கள்
பாவனைக்காக திறந்து வைப்பு
[2017/09/29]
இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக
நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு கட்டிடம் அண்மையில் (செப்டெம்பர்,24)
பொதுமக்கள் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டது.