ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள்
மற்றும் குற்றம் தொடர்பான கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் பாடநெறி
வெற்றிகரமாக நிறைவு
[2018/07/02]
ஐக்கிய நாடுகள் சபையின்
போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC)
இணைக்கப்பட்ட பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித்
கைப்பற்றல் (VBSS) தொடர்பான பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
இராணுவத்தினரால் மீள் நிர்மானிக்கப்பட்ட
கோல்ப் விளையாட்டு மைதானம் மற்றும் சமூக சாலை மக்களின் பாவனைக்காக வழங்கி
வைப்பு
[2018/07/01]
இராணுவ கோல்ப் விளையாட்டு
மைதானம் மற்றும் சமூக சாலை மண்டபம் 2018 ஆம் ஆண்டிற்கான ஹயிலன்டர் வெற்றி
கிண்ண போட்டிகளுக்காகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கோல்ப் விளையாட்டு
வீரர்களுக்காகவும் (30) ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டத.
இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற
‘புளத்திஷி பொசன் உதானய’ நிகழ்வு
[2018/06/29]
மேன்மை தங்கிய சனாதிபதி
மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்கிளிப்புடன் ‘ பிபிதெமு பொலன்னறுவை’ எழுச்சி
திட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் பொலன்னறுவையில் பொசன்
நிகழ்வுகள் (27) ஆம் திகதி இடம்பெற்றன.
முல்லைத்தீவில் வறுமைக்கோட்டின் கீழ்
வசிக்கும் குடும்பங்களுக்கு பல மில்லியன்கள் பெறுமதியான நன்கொடைகள்
[2018/06/29]
முல்லைத்தீவு
பிராந்தியத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கான பல்வேறு
சமூக நலன்புரித் திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின்
பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
[2018/06/28]
பாகிஸ்தான் பாதுகாப்பு
அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள், பாதுகாப்பு
செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று
(ஜுன்,28) சந்தித்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின்
பிரதானி இலங்கை வருகை
[2018/06/27]
பாகிஸ்தான் பாதுகாப்பு
அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் நான்கு நாட்கள்
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (ஜுன்,27) இலங்கையை வந்தடைந்தார்.
நாட்டிற்கு வருகை தந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அவர்களை பாதுகாப்பு
படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர சி விஜேகுனரத்ன மற்றும் இராணுவ
தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா.
அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு
[2018/06/27]
இலங்கை மனித உரிமைகள் ஆணையம்
இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு.
கடற்படையினரால் எழுவைதீவுப்பகுதியில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு
[2018/06/26]
அண்மையில் (ஜூன், 24) யாழ் மாவட்டத்தில்
எழுவைதீவுப்பகுதியில் மற்றுமொரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை இலங்கை
கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். வடக்கு கடற்படை கட்டளையகத்தினால்
முன்னெடுக்கப்பட்ட இவ் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் புனித தோமஸ் ரோமன்
கத்தோலிக் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளத
கொழும்பு சுப்பர்குரொஸ்
2018 நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு
[2018/06/24]
இரண்டாவது கொழும்பு
சுப்பர்குரொஸ் - 2018 போட்டி நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (ஜுன்,
24) கலந்து சிறப்பித்துள்ளார்.
முதல் தடவையாக முப்படையினர் மற்றும்
அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் போத்ஹயாவிற்கு புனித யாத்திரை
[2018/06/24]
முப்படை மற்றும் அவர்களது
அங்கத்தவர்களது பங்களிப்புடன் மொத்தமாக 160 பேர் அவர்களில் இலங்கை இராணுவம்
மற்றும் அவர்களது குடும்பத்தினர் 82 பேர் வாழ்நாளில் முதன்முறையாக
இந்தியாவிலுள்ள போத்ஹயாவிக்கு புனித யாத்திரை நிமித்தம் நேற்றைய தினம்
சென்றனர்.
சேவா வனிதா பிரிவின் தலைவி கம்புறுபிட்டிய
அபிமன்சலவிற்கு விஜயம்
[2018/06/23]
மாத்தறை
கம்புறுபிட்டியவிலுள்ள அபிமன்சலவிற்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா
பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் நேற்று (ஜூன், 22)
விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார.
கடற்படையினால் உலக நீரியல் தினம் அனுஷ்டிப்பு
[2018/06/22]
இலங்கை கடற்படையின் நீரியல்
அளவைப் பிரிவினரினால் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்ற 2018 ஆண்டுக்கான உலக
நீரியல் தின வைபவம் நேற்று (ஜூன், 21)கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் கலந்து
சிறப்பித்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்படையின் சமூக நலன்புரி சேவைகளுக்கு
பாரட்டு
[2018/06/21]
கடந்த வாரம் உலக இரத்ததான
தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், இலங்கை கடற்படையின்
வடக்கு கடற்படை கட்டளையாகத்தினால் சமூக நலன்புரி திட்டத்தின்கீழ்
முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வுகள் பாராட்டுப் பெற்றுள்ளன. சுகாதார
அமைச்சு, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ மற்றும் இலங்கை இரத்த வங்கி
ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தாமரை தடாக கேட்போர்கூடத்தில் (ஜூன், 14)
இடம்பெற்ற நிகழ்வின் போது பாரட்டப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன்.
எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க சகல
தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். – ஜனாதிபதி
[2018/06/20]
தற்போது சமூகத்தில்
பரவியுள்ள சகலவிதமான சீரழிவுகளிலிருந்தும் எதிர்கால சந்ததியினரைப்
பாதுகாப்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு
வருவதுடன்,
குளியாப்பிடிய பிரதேசத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு
இராணுவத்தினர் விரைவு
[2018/06/20]
அண்மையில் (ஜூன், 19) சூறாவளியினால்
சேதத்துக்குள்ளாக்கப்பட்ட குளியாப்பிடிய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு
இராணுவத்தின் ஒரு குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.
சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள்
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2018/06/19]
லெப்டினன்ட் ஜெனரல் சியாஒ
தியங்லியாங் தலைமையிலான சீன தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள்
பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை
இன்று (ஜுன், 19) சந்தித்தனர்.
தனியாருக்கு சொந்தமான சுமார் 120
ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராவத்தினரால் விடுவிப்பு
[2018/06/19]
தெல்லிப்பளை, கராச்சி,
மரிதிமேப்பற்று ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரின் உபயோகத்தில்
இருந்துவந்த சுமார் 120 ஏக்கருக்கு மேற்பட்ட காணிக்கான உத்தியோகபூர்வ
ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் குறித்த மாவட்ட
செயலாளர்களிடம் கையளித்துள்ளார்.
இராணுவத்தில் விடுமுறையில் இல்லாமல்
சேவைக்கு சமூகமளிக்காதவர்கள் தண்டனைக்குறிய குற்றமாகும்
[2018/06/18]
இராணுவத்திலிருந்து தப்பிச்
சென்று சேவைக்குத் தகவல் தெரிவிக்காத சிலர் தலைமறைவாக இருப்பதுடன் நாட்டில்
பல்வேறு இடங்களில் குற்றங்கள், திருட்டுக்கள் மற்றும் சமூக விரோத
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை
[2018/06/18]
நல்லெண்ண விஜயமொன்றை
மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான பிஎன்எஸ் 'டிக்ஸ்மட்' மற்றும்
'சொர்கௌப்' ஆகிய கப்பல்கள் இன்றையதினம் (ஜுன், 18) இலங்கைக்கு
வருகைதந்துள்ளன.
ஜனாதிபதி அவர்களின் ஈதுல் பித்ர் வாழ்த்துச்
செய்தி
[2018/06/16]
மானிட வர்க்கத்தின்
நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைப்படுத்திக் கொள்வதே முதன்மைத்
தேவையாக அமைகின்றது. சமூகத்திற்கு ஒவ்வாத எவ்வாறான செயல்களினதும் ஆரம்ப கரு
மனித மனங்களிலேயே உதிக்கின்றது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பொத்துவில்
மக்களுக்கு குடிநீர் விநியோகம்
[2018/06/14]
தென்மேற்கு பருவமழை காரணமாக
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முப்படையினரும் நிவாரண
உதவிகளை வழங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ள அதேவேளை, கிழக்கு பிராந்திய
மக்களுக்கு முக்கிய தேவையான குடிநீர் வழங்கும் மற்றொரு நிவாரண பணிகளில்
இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு மீனவர்கள் 'சயுரால' மூலம் பாதுகாப்பாக மீட்பு
[2018/06/13]
மீன்பிடி படகுமூலம் சென்ற இரு மீனவர்கள் தமது படகின்
இயந்திரக்கோளாறு காரணமாக திருகோணமலை கடற்பகுதிக்கபால் தத்தளித்து
கொண்டிருந்ததுடன், குறித்த மீனவர்ள் இலங்கை கடற்படை கப்பல் 'சயுரால' மூலம்
செவ்வாயன்று (12) பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் சமூக நலன்புரி நிகழ்வுகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு
[2018/06/13]
இலங்கை இராணுத்தின் கிளிநொச்சி படைபிரிவினர் அப்பகுதியில்
உள்ள முளங்காவில் கோயில் வளாகத்தினுள் சிரமதானப் பணிகளை கடந்த வாரம் (ஜூன்,
07).முன்னெடுத்துள்ளனர். மத குருமார்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு
அமைய குறித்த சிரமதான பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இராணுவ சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள்
சாதனை
[2018/06/12]
அண்மையில் தைபே இல்
இடம்பெற்ற சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டி – 2018 இல் கலந்துகொண்ட
இலங்கை இராணுவத்தை சேர்ந்த சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள் ஆண்களுக்கான
இரட்டையர் சாம்பியன்ஷிப் வெற்றியைப் பெற்று நாட்டுக்கு பெருமை
சேர்த்துள்ளனர்.
கழிவு முகாமைத்துவத்திற்கு கடற்படையின்
ஒத்துழைப்பு
[2018/06/12]
இலங்கை கடற்படையினர் சூழலை
பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அவற்றில்
ஒன்றாக பிளாஸ்டிக் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் ஒரு புதிய முறையினை
அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்புதிய முறையினை கடற்படையின் கடல்சார்
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டதுடன்,
அண்மையில் கல்பிட்டியவின் அனவாசலயில் பிளாஸ்டிக் மீள் சுழற்சி மையம் திறந்து
வைக்கப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன்
சந்திப்பு
[2018/06/11]
ஜெனிவாவுக்கான ஜப்பானிய
வதிவிடப் பிரதிநிதி தூதுவர் அதிமேதகு நொபுசிஜே தகமிசவா (Nobushige
Takamizawa) அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில
வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுன், 11) சந்தித்தார்.
தெற்கு கடற்பகுதியில் இரு மீனவர்கள்
பாதுகாப்பாக மீட்பு
[2018/06/11]
மீனவப்படகின் இயந்திரத்
கோளாறு காரணமாக தெற்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு
மீனவர்களை இலங்கை கடற்படை குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.