இராணுவத்தினரால் வறிய குடும்பத்திற்கு
புதிய வீடு
[2019/01/14]
கிளிநொச்சியில்
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று மாணிக்கபுரத்திலுள்ள ஒரு
வறிய குடும்பத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஹொரண, தலகல ஸ்ரீ
சித்தார்த்த அறக்கட்டளையகத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி இராணுவத்தினரால்
நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வீடு மாணிக்கபுர கிராமத்தில் வசிக்கும்
பயனாளிக்கு வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தினரால் அனாதை ஆசிரமத்தில் உள்ள
பிள்ளைகளுக்கு நிர்மானிக்கப்பட்ட பூங்கா
[2019/01/13]
இலங்கை இராணுவத்திலுள்ள
233 ஆவது படைத் தலைமையகத்தின்
ஏற்பாட்டிலும் விஜயதுங்க மஹரகம நிறுவனத்தினரது அனுசரனையுடன் கதிரவெலியில்
அமைந்துள்ள திலகவதியார் மகளீர் ஆனாதை விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கு கற்றல்
உபகரணங்கள் இம்மாதம் (02) ஆம்
திகதி நன்கொடையாக வழங்கப்பட்டத.
இலங்கை இராணுவத்திற்கு புதிய பிரதம அதிகாரி
நியமிப்பு
[2019/01/11]
இலங்கை இராணுவத்தின்
53 ஆவது
பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதன்கிழமையன்று (ஜனவரி,
09) நியமிக்கப்பட்டுள்ளார்.
திடீர் விபத்துக்களின் போது மூளைச்
சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு
நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
[2019/01/10]
திடீர் விபத்துக்களின் போது
மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு
நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு
ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி
மாணவர்களுக்கு கல்வி உதவிகள்
[2019/01/10]
கிளிநொச்சி மாவட்டத்தில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 800 க்கும் மேற்பட்ட பாடசாலை
மாணவர்களுக்கு கடந்த திங்களன்று ( ஜனவரி, 07) நடைபெற்ற வைபவத்தின் போது
புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று
[2019/01/09]
நான்கு வருட கால
அனுபவங்களுடன் மக்கள் நேய செயற்திட்டங்கள் வெற்றியை நோக்கி
முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.
கடற்படையின் 'பல் பரிமாண போர் பயிற்சி நெறி
2019' ஆரம்பம்
[2019/01/09]
இலங்கை கடற்படையின்
ஏற்பாட்டில் 'பல் பரிமாண போர் பயிற்சி நெறி 2019' கடந்த திங்களன்று (ஜனவரி,
07) ஆரம்பமானது. குறித்த போர் பயிற்சியானது கிழக்கு துறைமுக நகரான
திருகோணமலையில் கடற்படை சிறப்பு படை பிரிவினால் முன்னெடுக்கப்படுவதாக
கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தின் உதவியுடன் கண்டி வர்த்தக
கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள்
[2019/01/09]
நேற்றுக்காலை (ஜனவரி,
08) கண்டி நகரின் வர்த்தக
கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து இராணுவத்தின் உதவியுடன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
துருக்கிய தூதுவர் பாதுகாப்புச்
செயலாளருடன் சந்திப்பு
[2019/01/09]
துருக்கி தூதுவர் அதிமேதகு
திரு. டுன்கா ஒசுஹாடர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி
பெர்னாண்டோ அவர்களை திங்களன்று (ஜனவரி, 07) சந்தித்தார்.
மேல்மாகாண ஆளுநர் அவர்கள் பாதுகாப்பு
செயலாளருடன் சந்திப்பு
[2019/01/09]
புதிதாக நியமிக்கப்பட்ட
மேல்மாகாண ஆளுநர், திரு. அசாத் சாலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு.
ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி,04) சந்தித்தார்.