மீள் குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த இந்தியாவிலிருந்து தேவையான பொருட்கள்
மீள் குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த இந்தியாவிலிருந்து
தேவையான பொருட்கள்
வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்தும்
பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, கூடாரத் துணி வகைகளும் ஏனைய உபயோகப்
பொருட்களும் இந்தியாவிலி ருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகக்
கினிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து உயோகப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதும் கினிநொச்சியில்
மீள்குடியேற்றப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். கண்டாவளை,
பச்சிலைப்பள்னி, கரைச்சி ஆகிய பகுதிக னில் மக்களை மீளக்
குடியமர்த்துவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதென்று அரச
அதிபர் கூநினார்.
பூநகரி, கண்டாவளை
பிரதேச செயலகப் பிரிவுகனில் ஏற்கனவே மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த சகலரையும்
ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் மீள்குடியமர் த்தும் இலக்குடன் பணிகள்
மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
குடியிருப்புப்
பகுதிகனில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள் ளதுடன்,
சிவில் நிர்வாகத்தைச் சீராக மேற் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக
அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மீள்குடியேறும்
மக்களுக்கு வழங்க ப்படும் நிவாரணப் பொருட்கள் தீர்ந்து வருவதால், அவை
விரைவில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படு கின்றன.
அவை வந்து சேர்ந்ததும்,
தயார் நிலையில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்கனில் மீளக் குடியம
ர்த்தப்படுவார்களென்றும் அரச அதி பர் மேலும் தெரிவித்தார்.