››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 2/1/2010 9:30:55 AM பெற்றோரை இழந்த சிறுவர்கள்;

பெற்றோரை இழந்த சிறுவர்கள்;

கிளிநொச்சி, முல்லைத்தீவில் சிறுவர் மனவள நிலையங்கள்

மோதல்கள் காரணமாக பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இரு சிறுவர்கள் மனவள நிலையங்களை அமைக்க உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று தெரிவித்தது.

கிளிநொச்சியில் ரூ. 350 மில்லியன் செலவில் சிறுவர் மனவள நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு இதற்கான இடமும் அடையாளங் காணப் பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மோதல்கள் காரணமாக சுமார் 1253 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களில் 239 பேர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு பெற்றோர்களில் ஒருவரை மட்டும் இழந்த 308 பேர் பெற்றோ ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 684 பேர் வவுனியா மற்றும் மன்னாரில் உள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நலன்களைப் பேண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள தோடு மேற்படி சிறுவர் மனவள மேம் பாட்டுக்கு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக சிறுவர் பாது காப்பு அதிகார சபை அதிகாரி கூறினார்.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்