மதியாமடுவில் இவ்வாரம் மீள்குடியேற்றம்
மீள்
குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள்
இவ்வாரத்தில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி
சார்ள்ஸ்
தெரிவித்தார்.
மதியாமடு
பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள்
நிறைவுபெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கான
முன்னோடி
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர்,
இவ்வாரத்திற்குள் அப்பகுதியில்
மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.
மதியாமடு
பிரதேசத்தில் சுமார்
300
குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும்
அவர்
மேலும் தெரிவித்தார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் இன்று
ஆயிரம்
பேர்
பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன் |