››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 2/9/2010 9:22:37 AM யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்க உதவுங்கள்

யுத்தத்தால் பிரிந்துள்ள மனங்களை ஒன்றிணைத்து இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்க உதவுங்கள்

உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

யுத்தத்தினால் பிரிந்துள்ள மனங்களை மீள ஒன்றிணைத்து இலங்கையை சிறிய சொர்க்கமாக உருவாக்கும் நடவடிக்கைக்கு உலக நாடுகள் தம்முடன் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய பல்கலைக்கழக நிகழ்வொன்றில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு கல்விமான்கள் மத்தியில் உரைநிகழ்த்திய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு அழைப்பு விடுத்தார். உலகம் முழுவதிலும் சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழித்து இலங் கையில் சமாதானத்தையும் அபிவிருத்தி யையும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில் ரஷ்யாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவை மேலும் பலப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகமான பெட்ரிக் லுமும்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

பிரசித்திபெற்ற இலக்கியவாதியான என்டன் செகோவ் ஒருமுறை இலங்கையை சிறிய சொர்க்கமென வர்ணித்துள்ளார். அந்த சொர்க்கம் அங்கு மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

உலகின் பொருளாதார ஆய்வாளர்கள் இலங்கையை அபிவிருத்தி வேகத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாகவும் சுற்றுலாப் பயணத்திற்கான முதல்தர நாடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பயங்கரவாதம் காரணமாக பிரிந்துள்ள மனங்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையில் ரஷ்யா மட்டுமன்றி முழு உலகமும் இணைய வேண்டுமென ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இலக்கியம் மற்றும் கலாசார ரீதியில் இலங்கையும் ரஷ்யாவும் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தன. மீண்டும் அத்தகைய நெருக்கமான நல்லுறவினை ஏற்படுத்தி இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்தும் செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மொஸ்கோ மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் பிலிப்போவ், உலகில் சமாதானத்திற்கு முன்னுதாரணமாகத் திகழும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தமையை பெரும் கெளரவமாகவும் வெற்றியாகவும் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விஜயமானது கடந்த 50 வருடங்களுக்கு முன் இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய நல்லுறவு மேலும் வலுப்பட உறுதுணையாக அமைந்ததாகவும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியின் இவ்விஜயத்தைக் கெளரவப்படுத்தும் வகையில் இலங்கைக்கு வழங்கும் புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உலக சமாதானத்திற்கு முன்னுதாரணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறப்பு ஞாபகார்த்த விருதொன்றும் வழங்கப்பட்டது.


இந் நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட ரஷ்ய விஜயத்திற்கான தூதுக் குழுவில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கல்விமான்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்