யாழ்ப்பாணத்தில் இன்போடெல் கண்காட்சி- 2010
இவ்வருட “இன்போடெல்” தகவல் தொலைத்தொடா்பு தொழில்நுட்பக்
கண்காட்சியை இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரியில் இம்மாதம் 26;
முதல் 28 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தகவல் மற்றும் தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தால்
நாட்டை எழுச்சிபெறச் செய்வோம்” என்ற தொனிப்பொருளிலான இக்கண்காட்சி
நடைபெறவுள்ளது.
வடபகுதி மக்களின் தகவல் தொழில் நுட்பக் கல்வியை
மேம்படுத்தும் பொருட்டும் அப்பிரதேச இளைஞாகளுக்கான தொழில் வாய்ப்புக்களை
அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் இக்கண்காட்சி யாழ்ப்பாணத்தில்
நடத்தப்படுகிறது.
இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப
நிறுவனமும் கல்வி அமைச்சும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. |