வடக்கு, கிழக்கில் உயர்கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்ய கடன்
வடக்கு, கிழக்கில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை
அபிவிருத்தி செய்யவும் வேலையற்ற பட்டதாரிக ளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்
திக் கொடுக்கவும் உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திட மிருந்து
4.5 பில்லியன் ரூபா கடனு தவி பெறுவதற்கு
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான
அமைச்சரவைப் பத்திர த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார்.
இந்தத் திட்டத்தி னூடாக வேலையற்ற பட்டதாரிகளு க்கு வேலைவாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப அறிவு ஆங்கில மொழி
அறிவு, தொடர்பாடல் அறிவு என்பவற்றை மேம்படுத்த நடவடி க்கை எடுக்கப்படும்
இந்தத் திட்டம் ஜுலை மாதம் ஆம்பிக்கப்பட்டு 2015 டிசம்பர் மாதம் பூர்த்தி
செய்யப்படும்.
நன்றி தினகரன் |