மல்லாவியில் 1000 வீடுகளை நிர்மாணிக்க மார்டின் லூதர் கிங் III நிதியம்
இணக்கம்
வீட்டுக்கு தலா 5 ஆயிரம்
அமெரிக்க டொலர்
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் ஆயிரம் வீடுகளை
அமைக்க மார்டின் லூதர் கிங் யியியி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த மார்டின் லூதர் கிங் யியியி தலைமையிலான
குழுவினரை மதத் தலைவர்கள் சந்தித்த வேளை, ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள்
விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ஆர். பாபு சர்மா மல்லாவியில் ஆயிரம் வீடுகள்
அமைக்கும் திட்டத்தினை ஏனைய மதத் தலைவர்களுடன் இணைந்து முன்வைத் திருந்தார்.
இதற்கமைய மீண்டும் இலங்கை வந்துள்ள மார்டின் லூதர் கிங் யியியி இன்
அந்தரங்க செயலாளர் ஜோனி. ஜே. மெக் மற்றும் தென்னாசிய பகுதிக்கான இணைப்பாளர்
திருமதி மனேஸ்கா இளையதம்பி ஆகியோர், மல்லாவியில் ஆயிரம் வீடுகளை அமைக்கும்
திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு தலா 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வீதம் ஆயிரம்
வீடுகளை அமைத்துக் கொடுப்பதுடன் இவ்வீடமைப்புத் திட்டத்துக்கென பிரத்தியேக
குடிநீர் வசதி சமாதான ஒன்றுகூடல் மண்டபம் ஆகியவற்றை ஏற்படுத்திக்
கொடுக்கவும் இந்நிதியம் சம்மதித்திருப்பதாக பிரம்மஸ்ரீ ஆர். பாபுசர்மா
கூறினார்.
நன்றி தினகரன் |