பொது மக்களுடன் நல்லுறவு பேண யாழில் இராணுவ அலுவலகம்
யாழ்குடாவில் பனியாற்றும் படையினர் பொது மக்களுடனான
உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் சிவில் மற்றும் மக்கள் தொடர்பு
விடயங்களுக்கான அலுவலகம் யாழ்ப்பாண த்தில் நேற்று(மார்:09) அலுவலகம்
திறக்கப்பட்டுள்ளது..
உத்தரவின்பேரில்,யாழ் பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர்
ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க அவர்களின் அவர்களின் ஏற்பாட்டு செய்திருந்த இவ்
அலுவலகத்தை இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய திறந்து வைத்தார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காண
இந்த அலுவலகம் உதவும் அதேவேளை, இங்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையின் யாழ்.
தளபதியையும் சந்தித்து பேச முடியும். யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கை
நிலையை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துன் 24 மணி நேரமும் கிழமையில்
ஏழு நாட்களும் திறந்திருக்கும்.
இதேவேளை, தொடர்புகளையும் தகவல்களையும் துரித கெதியில்
வழங்கும் முகமாக “இன்டநெற்” www.cimicjaffna.com வசதியையும் இராணுவத்தளபதி
ஆரம்பித்து வைத்தார்.
|