தாமரைத் தடாகத்தில் சீன தேநீர் இசை காலாச்சார நிகழ்வு
[2016/05/23]
கொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று (மே.22) நடைபெற்ற
சீன தேநீர் இசை காலாச்சார நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் பிரதமர் கௌரவ. ரணில் விக்ரமசிங்க
மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர்.
கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோரும் இந்நிகழ்வில்
அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி இலங்கை மற்றும் சீன நாடுகளிக்கிடையே நிலவும்
ஆன்மீக வளர்ச்சியை விருத்தி செய்யும் வகையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்ச்சிகளும்
சீன கலைஞர்களினால் இங்கு அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் சிறந்த களைஞர்கள் உட்பட மஹா சங்க
உறுப்பினர்கள், சீனத் தூதரக அதிகாரிகள் மற்றும் பல அதிதிகளும் கலந்து
கொண்டனர்.
|