››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காணாமல் போனோர் விடயங்களைக் கையாள விசேட பணியகம்

காணாமல் போனோர் விடயங்களைக் கையாள விசேட பணியகம்

[2016/05/26]

கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை அறிந்து கொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும் பொருட்டு விசேட பணியகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த விசேட பிரேரணையின் மூலம் இந்த யோசனையை முன்வைத்திருந்தார். நேற்று முன்தினம்(24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரேரணைக்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.

காணாமற் போயுள்ளதாக அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நிலைமைகளின் கீழ் காணாமற் போன அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நபர்கள் தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவ்வாறு காணாமற் போயுள்ள நபர்கள் தொடர்பான விபரங்கள் அவர்களது உறவினர்களுக்கு அத்தியாவசியமானதாகும். அவ்வாறே காணாமல் போயுள்ள நபர்கள் தொடர்பான உண்மையான தகவல்களை அவர்களது உறவினருக்கு தெரியப்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை அடைந்துக்கொள்ள முடியும்.

காணாமற் போனவர்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமற்போனோர் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் பற்றுதல்களை பாதுகாத்துக்கொள்ளல் அறிவுறுத்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் கண்டு பிடிப்பதற்கு முடியாமற்போன நபர்களின் விபரங்கள் அடங்கிய தரவுகளை திரட்டி மத்திய தரவு வலையமைப்பொன்றை ஏற்படுத்தி கோவைப்படுத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்க காணாமற்போனோர் சம்பந்தமான பணியகம் எனும் பெயரில் சுயாதீன பணியகம் ஒன்றை தாபிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையில் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி அரச செய்தி ஊடகம்.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்