››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த படையினர் உதவி

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த படையினர் உதவி

[2016/06/22]

அண்மையில் (ஜுன்.17) எல்ல பிரதேச செயலகத்திற்குற்பட்ட திக்கரவ வன பாதுகாப்பு எல்லைப் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயானது, இராணுவ வீரர்கள் மூலம் கட்டுபாட்டுக்குள் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையையடுத்து விரைந்து செயற்பட்ட மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் கடைமையாற்றும் 112 வது படைப்பிரிவு தீ வேறு இடங்களுக்கும் பரவாமல் தடுத்து நிறுத்தியது.

இதேவேளை, மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் கடைமையாற்றும் 11 வது படைப்பிரிவானது, கண்டி மாவட்டத்தில் ஜுன் 16 தொடக்கம் 18 வரையான காலப்பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்களில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைகளுக்காக அவர்கள் சுகாதார அதிகாரிகள், அரச அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், அரசார்பற்ற நிறுவனங்களின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்