கொஸ்காம மாணவர்களுக்கு மேலும் பல உதவிகள்
[2016/06/24]
இராணுவத்தினரின் கொஸ்கம ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற
வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களுக்கு
மற்றுமொரு கட்டமாக உதவி செய்யும் வகையில் 250 மாணவர்களுக்கு பயிற்சி
கொப்பிகள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட பயிற்சி
புத்தகங்களை வழங்குவதற்கு பனாகொட பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் மாணவர்கள்
தாமாக முன்வந்ததாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை (ஜுன்.23) கெஸ்காம அகரவிட்ட வித்தியாலத்தில்
இடம்பெற்ற இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப வைபவத்தின் போது இராணுவத்தளபதியினால்
45 மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி
நிகழ்ச்சித் திட்டம் தரம் 1 முதல் தரம் 10 வரையிலான மாணவர்களுக்கான
அவசியமான பயிற்சி புத்தக தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இராணுவத் தளபதியினால் அன்பளிப்பு செய்யப்பட்ட
30 உலர் உணவுப் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொரளுகொட சிறி
வர்தனாராமய விகரையின் தலைமை விகாராதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் அண்மையில் (ஜுன்.13) கலுவாக்கல, ரெஸ்கோ
வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட 1300
மாணவர்களுக்கான பயிற்சி புத்துகங்கள் இலங்கை இராணுவத்தினரால் வழங்கி
வைக்கப்பட்டதுடன் பாடசாலைச் சீருடைகள் வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
|