இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகள் கீரிமலை
வீட்டுத் திட்டத்தை கட்டுகின்றனர்
[2016/08/21]
யழ்-பாதுகாப்பு படை தலைமையகத்தின் நேரடி மேற்பார்வையின்
கீழ் இராணுவத்தினருடன் இணைந்து முன்னாள் தமிழீழ விடுதலைப் போராளிகள் மற்றும்
பயணாளிகள் ஆகியோர் இடம் பெயர்ந்து 31 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்படுள்ள
971 குடுமபங்களை மீள்குடியேற்றும் வகையில் கீரிமலைப் பகுதியில் புதிய
வீடுகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இச் செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி இராணுவத் தளபதி
லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோரின் ஆசிர்வாதித்துடனும்
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் ஆகியன ஒருங்கிணைந்தும்
செயற்படுத்தப்படுகிறது.
இராணுவ வட்டாரங்களின் கருத்துப்படி ,இப் பாரிய கீரிமலை
வீட்டுத் திட்டம் முதட் கட்டமாக 100 புதிய வீடுகளை நிறைவு செய்யும் வகையில்
கூட்டு செயற் திட்டம் முகாமைத்துவ குழுவின் கீழ்
செயல்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு வீடும் சுமார் 9 இலட்சம் பெறுமதியாகும்.
வெள்ளிக்கிழமை (19) க்குள் கிட்டத்தட்ட 50 சத வீதம் ஒவ்வொரு வீட்டுத்
தொகுதியின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
20 பேர்ச் பரப்பளவில் நிர்மாணிக்கும் இவ் வீட்டில் இரு
படுக்கை அறைகள், ஒரு வாழ்க்கை அறை, சாப்பாட்டு பகுதி,சமயலறை, கழிப்பறை
மற்றும் ஒரு குளியலறை போன்றன நிர்மாணிக்கப்படுகிறது.அத்துடன் இவ் வீட்டுத்
தொகுதியில் ஒரு சமூக மையம், விளையாட்டு மைதானம், முன்பள்ளி, சிறுவர்
இல்லம்,மீன் சந்தை,பொலிஸ் நிலையம் மற்றும் பல அவசியமான வசதிகளும்
காணப்படுகின்றன.
மேலும், ஒரு வாரத்திற்கு முன்பதாக பாதுகாப்பு செயலாளர்
பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் சென்ற உயர் மட்ட
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்க தூதுக் குழு ஆகியோர் குறித்த இச்
செயற்றிட்டத்தை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
|