இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்திய அமைதிப் படையின்
நினைவுத்தூபிக்கு அஞ்சலி
[2016/08/26]
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை
மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜெனரல் (ஓய்வுபெற்ற)
விஜய் குமார் சிங் அவர்கள் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை
நினைவுத் தூபி முன்னிலையில் நேற்று (ஆகஸ்ட் 26) மலர் அஞ்சலி செலுத்தினார்.
உயிர் நீத்த இந்திய சமாதனப் படை வீரர்களை நினைவு கூர்ந்து
கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்
ஸ்தானிகர் கௌரவ. வை.கே சின்ஹா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர
விஜேகுனரத்ன, மேற்குப் பிராந்திய கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல்
ஜயந்த டி சில்வா, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்ட பல கடற்படை.
அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|