இந்திய தேசியப் பாதுகாப்பு பிரதி ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன்
சந்திப்பு
இந்திய தேசியப் பாதுகாப்பு பிரதி ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன்
சந்திப்பு
[2016/09/02]
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டில் மண்டபத்தில்
நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மகாநாட்டுக்கு வருகை தந்த இந்திய
தேசியப்பாதுகாப்பு பிரதி ஆலோசகரும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின்
செயலாளருமாகிய கலாநிதி அரவிந் குப்தா அவர்கள் பாதுகாப்பு செயலாளர்
பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை நேற்று ( செப்டம்பர்.1 )சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கலாநிதி குப்தா
ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் நினைவுச்
சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின்போது இந்திய உயர்ஸ்தானிகர் திரு .வை கே .சின்ஹா மற்றும் இந்திய
பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பிரகாஷ் கோபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.