ஜனாதிபதி நிவ்யோர்க் பயணம்
[2016/09/18]
ஜனாதிபதி மைதிரிப்பல சிறிசேன நிவ்ஜோர்க் நகரின் ஐக்கிய
நாடுகள் தலைமையகத்தில் நடைபெற உள்ள 71வது ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில்
கலந்துகொல்வதற்காக எமிரேட்ஸ் 651 பயணிகள் விமானத்தில் அவர் இன்று (செப்டம்பர்
-18) காலை 10.45 மணியளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நாளையிலிருந்து ( செப்டம்பர் 19 - 26 ம் திகதி வரை
நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அதி மே தகு ஜனாதிபதி அவர்கள் எதிர்வரும்
புதன்கிழமை (செப்டம்பர் 21) இரண்டாவது முறையாக உரை நிகழ்த்த உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு இதுவே ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய
செயலாளர் பான் கீ மூன் கலந்துகொள்ளும் இறுதி நிகழ்வாகவும் அமைய உள்ளது.
ஜனாதிபதி பிரதிநிதிகளாக அமைச்சர் மங்களசமரவீர, கயந்த
கருணாதிலக, நிமல் சிறிபால டிசில்வா, அருஜுன ரணதுங்க, மற்றும் பாயிஸ் முஸ்தபா
உட்பட பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொலன்னே ஆகியோர்களும் சென்றுள்ளனர்.
|