››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மறைந்த ஜேஆர் ஜெயவர்த்தன அவர்களின் பிறந்த தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

மறைந்த ஜேஆர் ஜெயவர்த்தன அவர்களின் பிறந்த தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2016/09/20]

கொழும்பு ஜேஆர் ஜெயவர்த்தன நிலையத்தில் நேற்று (செப்டம்பர்.19) நடைபெற்ற மறைந்த ஜேஆர் ஜெயவர்த்தன அவர்களின் 110வது பிறந்த தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து கொண்டார். இதேவேளை, கௌரவ. பிரதம ரணில் விக்ரமசிங்க அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் முக்கிய உரை பேராசிரியர் இந்திரகீர்த்தி சிறிவீர அவர்களினால் நிகழ்தப்பட்டது.

மறைந்த ஜேஆர் ஜெயவர்த்தன அவர்கள், 1906ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி பிறந்த இவர் இலங்கையின் முதலவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆவார். தொழில் ரீதியாக சட்டத்தரணியான மறைந்த ஜேஆர் ஜெயவர்த்தன அவர்கள், 1977 ஆம் ஆண்டு இள வயதில் அரசியலில் பிரவேசித்து தனது கட்சியை வெற்றி பெறச் செய்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள், விஷேட அதிதிகள் மற்றும் மறைந்த ஜேஆர் ஜெயவர்த்தன அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்