››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘மித்ரா சக்தி’ கூட்டுப்பயிற்சி வெற்றிகரமாக முன்னெடுப்பு.

‘மித்ரா சக்தி’ கூட்டுப்பயிற்சி வெற்றிகரமாக முன்னெடுப்பு.

[2016/10/27]

மித்ரா சக்தி’என அழைக்கப்படும் இந்திய – இலங்கை இராணுவங்களின் கூட்டுப் பயிற்சி நான்காவது முறையாகவும் அம்பேபுஸ்ஸவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவு தலைமையகத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்ற குறித்த இப்பயிற்சியில் இந்திய இராணுவத்தின் 45 படை வீரர்களும் இலங்கை இராணுவத்தின் 45 காலாட்படை வீரர்களும் பங்குபற்றியுள்ளனர்.

குறித்த இக் கூட்டுப் பயிற்சி இம்மாதம் 24ம் திகதி ஆரம்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மித்ரா சக்தி’ கூட்டுப்பயிற்சியின்போது நாடுகடந்த பயங்கரவாதம், இணைந்து செயலாற்றும் திறன்கள், கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் இரு தரப்பினரின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் போன்ற விடயங்களை விருத்தி செய்யும் வகையில் இடம் பெற்றறுள்ளது மேலும் இப்பயிற்சியில் பங்கு கொண்டுள்ளோர் 'துப்பறியும் மற்றும் வெடிக்கருவிகளின் அகற்றல் (IEDS), 'இரசாயன ஆயுதங்கள், 'விஐபி பாதுகாப்பு, 'போர் தடைகள், 'உயிர் ஆபத்துக்களை கண்டறிதல், கண்காணிப்பு மற்றும் உளவு’ ஆகிய விடயங்களில் விரிவான அறிவினை எதிர்வரும் இரண்டு பயிற்சி நாட்களிலும் பெற்றுகொள்வார்கள் என இராணுவத்தின் ஊடகப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இக்கூட்டுப் பயிற்சி இந்தியாவில் இரு தடவைகளும் இலங்கை கொமாண்டோவின் குடா ஓயாபயிற்சி கல்லூரியில் ஒரு தடவையும் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது. பயிற்சியின் இறுதி நிகழ்வானது (நவம்பர் 4ம்) திகதி முடிவடையும் அதேவேள உத்தியோக பூர்வ இறுதி நிகழ்வுகள் (நவம்பர் 6ம்) திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இப்பயிற்சியானது இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் மேற்பார்வையிலும் மற்றும் ஒருங்கிணைப்பலர்களான இலங்கை இராணுவ காலாட்படையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாகி கலகே (Chagie Gallage) இந்திய இராணுவத்தின் அவதானிப்பாளர் பிரிகேடியர் சுஜீத் சிவாஜி

குறித்த இப் பயிற்சி இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் மேற்பார்வையில் நடைபெறகின்றது.மேலும், இலங்கை இராணுவ காலாட்படையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாகி கலகே அவர்களினால் ஒருங்கிணைக்கப்ட்டுள்ள அதேவேளை, இந்திய இராணுவத்தின் பிரிகேடியர் சுஜித் சிவாஜி படேல் அவர்களினால் இக் கூட்டுப் பயிற்சி கண்காணிப்படுகின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்