››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்பு

[2016/12/02]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் களனி பியகம மஹா வித்தியாலயத்தில் நேற்று (டிசம்பர். 01) இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியாகள் வரவேற்றதுடன் பாடசாலை மாணவச் சிப்பாய்களினால் அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.

மேலும் இங்கு இடம்பெற்ற நிகழ்வில் கடந்த வருடம் கல்வியில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இராஜாங்க அமைச்சர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை பாடசாலை நிருவாகத்தினால் இராஜாங்க அமைச்சருக்கு நினவுச்சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்