அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2016/12/04]
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் நடைபெற்ற
அயாட்டி அங்கவீனமுற்ற பிள்ளைகள் மையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று
(டிசம்பர்.3) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ராகம மருத்துவ பீட மைதானத்தில் 42,000 சதுர அடி நீளம்
கொண்ட மையத்தினை நிர்மாணிப்பதற்கு தேவையான மனித வலுவினை வழங்குவதற்கு
பாதுகாப்பு அமைச்சின் ஆசீர்வாதத்தின் கீழ், இலங்கை கடற்படை முன்வந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அயாட்டி அங்கவீனமுற்ற பிள்ளைகள் மையத்தினை களனி
பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங் பீஎல்சி ஆகியன
இணைந்து ஆரம்பித்து வைத்தன.
இந்நிகழ்வில் மத குருமார்கள், சிரேஷ்ட இராணவ
அதிகாரிகள்,ஹேமாஸ் ஹோல்டிங்க நிறுவத்தின் பிரதிநிதிகள் மற்றும் களனி
பல்கலைக்கழகத்தின் பிரதிநிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் புகைப்படங்களை பார்வையிட >> |