››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட எழுவைதீவு இறங்கு துறை மக்கள் பாவனைக்கு

கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட எழுவைதீவு இறங்கு துறை மக்கள் பாவனைக்கு

[2016/12/05]

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கபட்ட எழுவைதீவு இறங்கு துறை அண்மையில் (டிசம்பர்.02) திறந்து வைக்கப்பட்டதாக கடற்படையின் ஊடகச் செயதி தெரிவிக்கின்றது.

இதேவேளை, படகு கட்டுமான சாய்தளத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வொன்றும் ஊர்காவற்துறையில் நடைபெற்றது. குறித்த இச்செயற்றிட்டத்தின் மூலம் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மீனவர்களின் படகுகளை திருத்துவதற்கு உதவியாக அமையும்.

மேலும், இச் செயற்றிட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலின் பேரில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் பல பிரதேச வாழ் மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்