››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மறைந்த தமிழ்நாடு மாநில முதலமைச்சருக்கு ஜனாதிபதி அவர்களின் இரங்கல் செய்தி

மறைந்த தமிழ்நாடு மாநில முதலமைச்சருக்கு ஜனாதிபதி அவர்களின் இரங்கல் செய்தி

[2016/12/06]

தமிழ்நாடு மாநிலத்தின் கௌரவ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றேன்.

கௌரவ முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதுடன் அவரது ஆதரவாளர்கள் அவரை பெரிதும் நேசித்தார்கள் என்பது உண்மையாகும். கௌரவ ஜெயலலிதா இந்திய அரசியலில் ஒரு பெரும் தூணாக இருந்ததுடன் ஐந்து முறை தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவராவார்.

கௌரவ ஜெயலலிதா அவர்களின் மறைவினால், இந்தியா அதன் முன்னணி பெண் அரசியல்வாதியை இழந்து நிற்பதுடன், ‘அம்மா‘ என மக்கள் அன்புடன் அழைத்த, அம்மக்களை உண்மையாகவே ஆதரித்து வந்த ஒரு தலைவரை இழந்து நிற்கிறது.

இந்த சோகமான தருணத்தில் நாமும் அம்மக்களின் உணர்வுகளுடன் ஐக்கியப்படுகின்றோம்.

மைத்ரிபால சிறிசேன

2016 டிசம்பர் 06ஆம் திகதி

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்