பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு
[2016/12/31]
பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால
பொதுமன்னிப்பு காலம் இன்று (டிசம்பர்.31) நிறைவு பெறுகின்றது.அத்துடன்
குறித்த இப்பொதுமன்னிப்பானது இவ்வருடம் முப்படைகளிலிருந்து தப்பிச்
சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பொதுமன்னிப்புக் காலம் என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும், பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து
இதுவரை (டிசம்பர்.26 வரை) 9 இராணுவ அதிகாரிகள் மற்றும் 6502 இராணுவ வீரர்கள்
2 கடற்படை அதிகாரிகள் மற்றும் 614 கடற்படையினர் மற்றும் 20 விமானப்படை
அதிகாரிகள் 194 விமானப்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச்
செல்லவதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஊடக
மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள்
தெரிவத்துள்ளார்.
குறித்த இக்காலத்தில் சட்ட ரீதியாக விலகிச்
செல்லாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்பான செய்திகள் >>
|