பாதுகாப்பு அமைச்சில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க விரிவுரை
[2017/01/13]
பாதுகாப்பு அமைச்சினால் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும்
நல்லிணக்க வாரத்தினை முன்னிட்டு ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம்
தொடர்பான விரிவுரை ஒன்று அமைச்சில் இன்று (ஜனவரி.13) இடம்பெற்றது.
குறித்த இந்நிகழ்வில் பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன
அவர்களால் ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக விஷேட விரிவுரை
நிகழ்த்தப்பட்டது.
மேலும், இந்நிகழ்வின் போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும்
ஊழியர்களினால் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான
சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்பட்டது.
இந்நிகழ்வினை முன்னிட்டு பேராசிரியர் அவர்களுக்கு
நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கருத்திட்டத்தின்
கீழ் ஜனவரி.08ம் திகதி முதல் 14ம் திகதி வரை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும்
நல்லிணக்க வாரமாக அரசாங்கம் பிரகடணப் படுத்தியுள்ளது
குறித்த இந்நிகழ்வில் மேலதிக செயலாளர், சிவில் மற்றும் பாதுகாப்பு அமைச்சின்
இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|