››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துப் படகு கட்டுமானத் திட்டத்திற்கு சர்வதேச தரச்சான்று

இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துப் படகு கட்டுமானத் திட்டத்திற்கு சர்வதேச தரச்சான்று

[2017/01/25]

இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துப் படகு கட்டுமானத் திட்டத்திற்கு ஐஎஸ்ஓ 9001:2015 எனும் சர்வதேச தரச்சான்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த இத்திட்டத்திற்கான தரச்சான்று வழங்கி வைக்கும் நிகழ்வு இலங்கை கடற்படைக்கப்பல் பராக்கிரமவில் அமைந்துள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர்கூடத்தில் அண்மையில் (ஜனவரி. 24) இடம்பெற்றது.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் தலைவர், கடற்படை பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்