கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப்
பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக
சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை ஒரு இராணுவ
அதிகாரி மற்றும் 250 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு
சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து
விலகுவதற்காக கடந்த ஆண்டு இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு
கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட
பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்
உள்ளிட்ட ஒன்பதாயிரம் பேர் சட்டரீதியாக விலகிச் சென்றனர். மேலும்
முப்படையிலிருந்து சட்டரீதியாக விலகாத வீரர்களுக்கு எதிராக செயற்படுமாறு
பொலிஸ் மற்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்களங்களுக்கு
அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.