முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது
[2017/02/03]
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப்
பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக
சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை(பெப்ரவரி,
02) 450 முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர்
பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 313 இராணுவத்தினர்
மற்றும் 1 இராணுவ அதிகாரி, 133 கடற்படைவீரர்கள், 11 விமானப்படை வீரர்கள்
ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு
சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து
விலகுவதற்காக கடந்த ஆண்டு இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு
கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட
பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்
உள்ளிட்ட ஒன்பதாயிரம் பேர் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்திகள் >>
|