“ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திற்கான நடமாடும் சேவை
[2017/02/19]
இபலோகம பிரதேசத்தில் “ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திற்கான
நடமாடும் சேவை நிகழ்வொன்று முப்படையினரின் பங்களிப்புடன் அண்மையில் (பெப்ரவரி
.18) இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வானது “ரணஜயபுர” மக்களின் குறைபாடுகள்
மற்றும் இதுவரை நிறைவு பெறாத பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வினை
பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மேலும், இப்பிரதேச மக்களுக்கு ஆலோசனைகள் மற்றும்
மருத்துவ பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு,
கடற்படை, விமானப்படை மற்றும் ஏனைய இராணுவப்படைப் பிரிவினரின் பங்களிப்புடன்
இராணுவப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
முப்படையின் யுத்த வீரர்களுக்கு நிர்மாணிக்கப்படும் 1509
பிரிவு “ரணஜயபுர” வீட்டுத்திட்டதில் தற்போது ஆயிரத்திகும் அதிகமான யுத்த
வீரர்களின் குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றத.
|