இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/02/20]
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘கிரி சுல்தான் ஸ்கந்தர்
முடா - 367' நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி,19)
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது. வருகை தந்த குறித்த இக்கப்பலை
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
எதிர்வரும் புதன்கிழமை ( பெப்ரவரி, 22) வரை இலங்கையில்
தரித்திருக்கவுள்ள இக்கப்பல் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து
பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளதாக கடற்படைத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
|