முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் “தேக ஆரோக்கியத்தின்
முக்கியத்துவம்” எனும் தலைப்பில் விரிவுரை
[2017/02/25]
கொழும்பு இராணுவ வைத்தியசாலையினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது “ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்” எனும்
தொனிப்பொருளில் விரிவுரை ஒன்று அண்மையில் (பெப்ரவரி .20) முல்லைத்தீவு
பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை
தலைமையகத்தை சேர்ந்த 250 இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீர்கள்
கலந்துகொண்டனர். இந்நிகழ்வானது இராணுவ வீரர்களின் நலன் கருதி இலங்கை
இராணுவத் தளபதியின் வழிகாட்டலுக்கு அமைய நாடளாவிய ரீதியில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'உடற் பயிற்சியியை தொடர்வதின் முக்கியத்துவம்'
எனும் தலைப்பில் விரிவுரை மேற்கொள்வதட்கான ஒழுங்குகள் முல்லைத்தீவு
பாதுகாப்பு படை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ அவர்களால்
மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வின் மூலம் இராணுவ வீரர்கள் தொற்றா
நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவ
வைத்தியசாலையினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|