››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

[2017/03/03]

கடந்த (2016) ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் தொடர்ந்தும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்பிரகாரம் இதுவரை (2017 மார்ச், 01) சுமார் 1500 முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 1149 இராணுவத்தினர் மற்றும் 3 இராணுவ அதிகாரிகள் , 327 கடற்படைவீரர்கள், 21 விமானப்படை வீரர்கள் ஆகியோர் உள்ளடங்குவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களுக்கு சட்டரீதியாக கடமையிலிருந்து விலகுவதற்காக கடந்த ஆண்டு (2016) இரு முறைகள் பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி 34 அதிகாரிகள் மற்றும் 8843 படைவீரர்கள் சட்டரீதியாக விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள் >>

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீட

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

இராணுவத்திலிருந்த தப்பியோருக்கு பொது மன்னிப்பு



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்