இலங்கை கடற்படைக்கப்பல் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி
கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு
[2017/03/15]
மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி
சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில்
கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா நேற்று (மார்ச்
.14) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. குறித்த கப்பலில் 24 கடற்படையின்
கடல்சார் அணியினர் உட்பட 215 கடற்படை வீரர்கள் சென்றுள்ளதாக கடற்படை
தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கண்காட்சியானது ஆசியாவின் பசுபிக்
பிராந்தியத்தில் ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறுகின்ற மிகப்பெரிய கடல்சார்
கண்காட்சியாகும். இக்கண்காட்சி 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து
14வது தடவையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், 5 நாட்களைக்
கொண்ட இக்கண்காட்சியானது இம்மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிவரும்
25ம் திகதி நிறைவு பெறவுள்ளதோடு உலகம் பூராகவுமுள்ள நாடுகளிலிருந்து
பாதுகாப்பு மற்றும் வனிகவியல் துறைகளுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான
பார்வையாளர்கள் பங்குபற்ற உள்ளனர். |