பனாகொட இராணுவ முகாமில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற
யுத்த வீரர்களுக்கான கலந்துரையாடல்
[2017/03/15]
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற யுத்த
வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் உள்ளடங்கிய
2,000 வீரர்கள் மற்றும் ஊதியம் மற்றும் கொடுப்பணவு பதிவுகள் பணியகம்,
நலன்புரி நிர்வாக பணிப்பாளர், பணியாளர் நிர்வாக பணிப்பாளர் ஆகிய
நிலையங்களில் பணிபுரியும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரிடையே படைவீரர்களின்
நடப்பு விவகாரங்கள் பணியாகத்தின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இம்மாதம்
எதிவரும் 17ம் திகதி பனாகொட இராணுவ முகாமில் இடம்பெற உள்ளதாக
இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தளபதி லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா
அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்பான
பிரச்சினைகள், நிர்வாக செயற்பாடுகள், மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக
விளக்கமளிக்கும் வகையில் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வு மற்றும் அது தொடர்பான நடைமுறை செயற்பாடுகள் எதுவாக இருந்தாலும்
அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கபடவுள்ளது. மேலும், யுத்த வீரர்களின் நலன்
கருதி ஒரு நடமாடும் ஆலோசனை வழங்கும் சேவைகளும் இங்கு இடம்பெற இருக்கின்றமை
குறிப்பிடத்தக்கதாகும். |