இந்திய மற்றும் அமெரிக்க கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை
[2017/03/28]
இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு சொந்தமான
போர்க்கப்பல்கள் இன்று (மார்ச் .27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி
நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்ப்பரப்பு
ஆய்வுக்கப்பல் “ ஐஎன்எஸ். டர்ஷக்“ மற்றும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான
“யூஎஸ்எஸ் காம்ஸ்டக்“ ஆகிய இரு கப்பல்களும் இலங்கை வந்துள்ளன. குறித்த இரு
கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி
வரவேற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “ ஐ.என்.எஸ். டர்ஷக்“ இம்மாதம் 30ம் திகதி
புறப்படும் அதேவேளை, “யூ எஸ் எஸ் காம்ஸ்டக்“ நான்கு நாள் வரை கொழும்பில்
தரித்து நிற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல்களில் வருகைதந்த கடற்படை வீரர்கள் இலங்கை
கடற்படை வீரர்களுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.
|