சேவா வனிதா பிரிவினால் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு
[2017/03/30]
சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன
அவர்களின் வழிகாட்டலின் கீழ் புற்றுநோய் தொடர்பாக பெண்களுக்கான
விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா
பிரிவினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (மார்ச் .30) ஏற்பாடு
செய்யப்பட்டது.
குறித்த விரிவுரை வைத்திய கலாநிதி ஜயந்த பாலவர்தன
அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிக
எண்ணிக்கையான பெண் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை நினைவு கூறும்
வகையில் விரிவுரையாளருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
|