தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை
எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு வெற்றிகரமாக நிறைவு
[2017/04/04]
தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள்
கற்கைகளுக்கான நிலையதின் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல்
மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா
பிராந்திய மாநாடு வெற்றிகரமாக இன்று (ஏப்ரல் 04) நிறைவுபெற்றது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற குறித்த மாநாடு கொழும்பு சினமன்
லேக் சைட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமானதுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து
சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் இரண்டாம் நாள் அமர்வில் கலந்துகொண்ட
முன்னாள் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. நிஹால் ரொட்ரிகோ,
பேராசிரியர் இம்திஸா அஹமட், திரு.பிரஷாந்த் ஜாஹ், திரு. பர்ஸஷு ராம் கபிலே
மற்றும் திரு.ஸிஹ்னாத் ஹசன் சியோ ஆகியோர் தமது விளக்கக்காட்சிகளை
முன்வைத்தனர.
|