ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக இராணுவ விளையாட்டு
வீரர்கள்
[2017/04/23]
இந்தியாவில் நடைபெற இருக்கும் 22வது ஆசிய சாம்பியன்ஷிப்
போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் இலங்கை
சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீரர்கள் தியகமையில் இலங்கை
விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளின்போது
தெரிவுசெய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் இவ்வருடம் ஜூலை 6ம்
திகதி முதல் 9ம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வர் எனும் இடத்தில் இடம்பெற
இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் ஆசிய சாம்பியன்ஷிப் கழகத்தினால் ஆசிய
சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏற்பாடுசெய்யப்படுகின்றது.
|