››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் கொழும்பு வருகை

பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் கொழும்பு வருகை

[2017/05/03]

பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் “டாஷ்ட் ” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மே .03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இங்கு தரித்திருக்கவுள்ள இக்கப்பல்களின் சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் 6ம் திகதி புறப்படவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்