பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் கொழும்பு வருகை
[2017/05/03]
பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் “டாஷ்ட் ”
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மே .03) கொழும்பு துறைமுகத்தை
வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை
மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மேலும், இங்கு தரித்திருக்கவுள்ள இக்கப்பல்களின்
சிப்பந்திகள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை
பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு
நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் 6ம் திகதி
புறப்படவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
|