பாகிஸ்தானிய உயரிஸ்தானிகர் பாதுகாப்பு படைகளின் பிரதாணியுடன் சந்திப்பு
[2017/05/07]
ஓய்வுபெற்ற்றுச் செல்லும் இலங்கைக்கான பாகிஸ்தானிய
உயரிஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) செயத் ஷகீல் ஹுசைன் அவர்கள்
பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்களின்
பிரியாவிடை அழைப்பை ஏற்று நேற்று (மே .05 ) சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு படைகளின் பிரதாணி மற்றும்
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயரிஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் இலங்கை மற்றும்
பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவந்த நட்புறவுகள்
தொடர்பாக நினைவு கூறப்பட்டதுடன், அதனை எதிர்காலத்தில் மேலும் வலுவூட்டுவதன்
தேவை குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில்
ஓய்வுபெற்ற்றுச் செல்லும் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயரிஸ்தானிகர்
அவர்களுக்கு பாதுகாப்பு படைகளின் பிரதாணி அவர்கள் நினைவுச் சின்னமும்
வழங்கிவைத்தார்.
|