பாதுகாப்பு அமைச்சில் 'பன' சொற்பொழிவு
[2017/05/08]
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர் குழுவினரால் வெசாக்
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'பன' சொற்பொழிவு நிகழ்வு
இன்று (மே, 08) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ்விசேடசமய நிகழ்வானது வணக்கத்துக்குரிய நபிரிதன்கடவர
ஞானரத்ன தேரோ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன
ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு அமைச்சினுடைய சேவா வனிதா பிரிவின் தலைவி வசந்தா
குணவர்த்தன, மேலதிக பாதுகாப்பு செயலாளர்கள் மற்றும் அமைச்சின்
உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
|