பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவுஸ்திரேலிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்
“ஓசியன் ஷெய்ல்ட்” இனை பார்வையிட்டார்
[2017/05/17]
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய
கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் ரோந்துக் கப்பல் “ஓசியன் ஷெய்ல்ட்” இனை
பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள்
நேற்று (மே, 16) விஜமொன்றை மேற்கொண்டார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை
செலுத்தி வரவேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயரிஸ்தானிகர்
அதிமேதகு ப்ரைசீ ஹட்சிசன், அரச அதிகாரி, கடற்படை உயர் அதிகாரிகள், மற்றும்
கப்பல் மாலுமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|